சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.
நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யாவின் இரண்டாவது திருமணம் வரும் 11-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்காக தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு மட்டும் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று பத்திரிக்கை கொடுத்து வருகிறார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு அவர் பத்திரிக்கை கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.
வியாழன் மாலை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் கமல்ஹாசனை சந்தித்த ரஜினிகாந்த் மகளின் திருமணப் பத்திரிக்கையை நேரில் கொடுத்தார்.