சென்னை: சென்னை காசிமேடுப் பகுதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மீனவர்களுடன் அமைச்சர் ஜெயக்குமார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
சீன எஞ்ஜினைக் கொண்ட படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க தடை விதிக்கும் அரசாணையை திரும்பப் பெறக் கோரி கடந்த 3 நாட்களாக காசிமேடுப் பகுதியில் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், மீனவர்களுடன், அமைச்சர் ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தை தொல்வியில் முடிந்ததால் இன்று 4வது நாளாகப் போராட்டம் தொடர்கிறது.