திருவண்ணாமலை, தஞ்சாவூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இணைமின் உற்பத்தி நிலையங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. காணொலிக் காட்சி மூலம் அவர் இணைமின் உற்பத்தி நிலையங்களைத் திறந்தார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையிலும், தஞ்சாவூர் மாவட்டம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையிலும் தலா 15 மெகாவாட் இணைமின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.