மக்களவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 100 சதவீத வெற்றி பெறும் என்று காங்கிரஸ் தேசியப் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறினார்.
அண்ணா அறிவாலயத்தில் தொகுதி உடன்பாட்டுக்குப் பிறகு கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: காங்கிரஸுக்கு புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டணி ஒப்பந்தம் முழு திருப்தி அளிக்கிறது. மக்களவைத் தேர்தலில் எங்களுடைய கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும். காங்கிரஸ் முழுமையான திருப்தியுடன் இருக்கிறது. எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகிறோம் என்பதை விரைவில் அமர்ந்து பேசி முடிவு செய்வோம் என்றார்.