சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே வடகனியில் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்துள்ள தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து பட்டாசு வெடித்து கொண்டிருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.