தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை: பிரேமலதா விஜயகாந்த்

மக்களவைத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை: பிரேமலதா விஜயகாந்த்


சென்னை: மக்களவைத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், மக்களவைத் தேர்தல் தொடர்பான பணிகளை தேமுதிக தொடங்கியுள்ளது. யாருடன் கூட்டணி, எந்தெந்த தொகுதிகளில்  போட்டி என்பதை விரைவில் விஜயகாந்த் அறிவிப்பார்.

தேமுதிக பலத்துக்கு உரிய தொகுதிகள் விரைவில் ஒதுக்கப்படும். விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com