ஸ்ரீபெரும்பதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சவிதா தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்பதூர் அருகே உள்ள சவிதா மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியின் 4-வது தளத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து விடுதியில் இருந்த மாணவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனங்களுடன் வந்துள்ள தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.