கூட்டணிக்காக கொள்கையை விட்டு பேரம் பேசுவதில்லை: ராமதாஸ் பேச்சு

தமிழகத்தில் 3 வது பெரியக்கட்சியாக வளர்ந்துள்ளோம். பெரியகட்சிகள் பாமகவை அழைப்பதற்கு தொண்டர்கள் உழைப்பும், வியர்வையும், 
கூட்டணிக்காக கொள்கையை விட்டு பேரம் பேசுவதில்லை: ராமதாஸ் பேச்சு


புதுச்சேரி: கூட்டணி வைத்தபோதும் கொள்கையை எக்காலத்திலும் விட்டுக்கொடுத்ததில்லை. கொள்கையில் நாம் தேக்குமரம். கூட்டணியின்போது நாணலாக வளைவோம். கொள்கையை விட்டு பேரம்பேசுவதில்லை என்று கூறினார் ராமதாஸ். 

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், மாநகர பகுதி மற்றும் வட்ட பொறுப்பாளர்களின் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான பட்டானூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின் இளைஞரணி தலைவரும் மக்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், கட்சியின் தலைவர் ஜி.கே.மணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தமிழகம் புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் அதிமுக - பாமக - பாஜக கூட்டணியை அமோக வெற்றி பெற செய்வதென ஒற்றை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

பின்னர், கட்சியினரிடையே ராமதாஸ் பேசுகையில், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நம் கூட்டணி வெல்ல கடுமையாக உழைப்பது அவசியம். தமிழகத்தில் 3 வது பெரியக்கட்சியாக வளர்ந்துள்ளோம். பெரியகட்சிகள் பாமகவை அழைப்பதற்கு தொண்டர்கள் உழைப்பும், வியர்வையும், போராட்டமும், சிறைவாசமும்தான் காரணம். 

7 மக்களவைத் தொகுதிகள் ஒரு மாநிலங்களவைத் தொகுதி என கூட்டணி உடன்பாட்டை கேள்விப்பட்ட பலரும் வயிறு எரிகின்றனர். தமிழகத்தின் 3 வது பெரிய கட்சியாக வளர்ந்துள்ள பாமகவிற்கு 10 தொகுதிகளை கேட்டுப்பெறும் தகுதி உள்ளதாகவும், 10 தொகுதி கேட்டோம், கூட்டணி என்பதால் 7 மக்களவைத் தொகுதிக்கு 1 கொண்டோம். பாமக யார் முதுகிலும் குத்தியது கிடையாது. காலையும் வாரியதில்லை. 

அதிமுக - பாமக கூட்டணி இயற்கையான கூட்டணி. கூட்டணி வைத்தபோதும் கொள்கையை எக்காலத்திலும் விட்டுக்கொடுத்ததில்லை. கொள்கையில் நாம் தேக்குமரம். கூட்டணியின்போது நாணலாக வளைவோம். கொள்கையை விட்டு பேரம்பேசுவதில்லை.

பத்து அம்ச கோரிக்கைகள் கூட்டணியின்போது முன்வைத்தது பற்றி வேறு கட்சிகள் சொல்லமாட்டார்கள். 7 தமிழர்கள் விடுதலைக்கு அழுத்தம் கொடுத்துள்ளோம். அன்புமணி கூறியதுபோல் 40 தொகுதிகள் மட்டுமல்ல, இடைத்தேர்தல் வரவுள்ள 21 தொகுதி சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இக்கூட்டணி வெல்ல வேண்டும். 

ஜூன், ஜூலை உள்ளாட்சித் தேர்தலில் கை கோர்க்கும் நிலை பலப்படுத்தும். கண்ணியத்தோடு பேசுங்கள், பழகுங்கள். யார் தூற்றினாலும் கவலைப்படாதீர்கள். தேர்தல் முடிந்த பிறகு நாகரீகமாக பதில் சொல்வோம். அப்போதும் கண்ணியம் தவறக் கூடாது என்பது தான் அன்புமணியின் கட்டளை. நாற்பதும் நமதே என்று ராமதாஸ் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com