கிருஷ்ணகிரி: குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் பாஜக காலூன்றவே முடியாது என்றும் தமிழகத்தை பொறுத்தவரை நாங்கள் எதிர்பார்க்கும் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்திதான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் மாவட்டத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்றத்தினர் மற்றும் மாற்றுக்கட்சியினர் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது.
இந்த இணைப்பு விழா நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசுகையில், இது இணைப்பு விழா அல்ல. ஒரு மாநாடு போன்று உள்ளது. மாவட்டத்தில் இருந்து மாற்றுக் கட்சியை சேர்ந்த 20 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்திருக்கின்றனர். பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிமுகவினர் துரோகம் இழைத்துள்ளனர். குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது.
மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வரும் பாஜக தமிழகத்திற்கு என்ன செய்தது என்பதை பட்டியலிட்டு கூற முடியுமா? என கேள்வி எழுப்பிய ஸ்டாலின், குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது.
ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகியவர்கள் திமுகவில் இணையும் நிகழ்வு முக்கியமான தருணம். மீண்டும் கூறுகிறேன் தமிழகத்தை பொறுத்தவரை பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒரு இரங்கல் கூட்டமாவது அதிமுக சார்பில் நடைபெற்றுள்ளதா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.