தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்தையில் இழுபறி இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
எங்கள் கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி, சக்தி வாய்ந்த கூட்டணி. இது வெற்றி கூட்டணியாக அமையும்.
தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை. முடியும் நேரத்தில் முடியும். தேச நலனுக்காக ஒருங்கிணைவோம், ஒன்றுபடுவோம். இந்த முறை நாற்பதும் நமதே நாடும் நமதே. எதிர்க்கட்சிகள் இனவிரோதி. பயத்தின் உச்சத்தில் ஸ்டாலின் இருக்கிறார்.
மற்ற கட்சிகள் அதிமுக கூட்டணியில் சேரக்கூடாது என்பதற்கான முயற்சியில் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். அதிமுக கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும் என்ற ஸ்டாலினின் எண்ணம் பலிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.