தமிழ்நாடு

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழிசை சௌந்தரராஜன் சந்திப்பு

DIN

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் இன்று அவரது இல்லத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்தார். 

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி, தமிழகத்தில்கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு எனஅரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக, பாஜக மற்றும் பாமகவுடன் கூட்டணி வைப்பது உறுதியாகியுள்ளது. பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

மேலும் தேமுதிக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் அதிமுக தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், முக்கிய கட்சியான தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில் சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று சந்தித்துப் பேசினார். 

இந்த சந்திப்பின் போது அதிமுக கூட்டணியில் தேமுதிகவின் நிலை குறித்தும், மேலும் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்தும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT