உள்நாடு, வெளிநாட்டில் மோடியின் அலை ஓய்ந்துவிட்டது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
திமுக - காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சிகள் கூட்டணி உறுதியாக உள்ளது. உரிய நேரத்தில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
மோடி மீண்டும் பிரதமராக 50சதவீதம் பேர் ஆதரவு என்பதை எதை வைத்து கணக்கிடப்பட்டது. உள்நாடு, வெளிநாட்டில் மோடியின் அலை ஓய்ந்துவிட்டது. மாயாவதி-அகிலேஷ் யாதவ் கூட்டணி பாஜகவுக்கு எதிரானது, காங்கிரசுக்கு எதிரானது அல்ல.
கொடநாடு விவகாரத்தை முதல்வர் சட்ட ரீதியாக அணுகாமல் கைது செய்யும் நடவடிக்கை கூடாது. கூட்டணிக் கதவை மோடி திறந்து வைத்தாலும், செல்வதற்கு யாரும் தயாராக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.