தமிழ்நாடு

மோடி அலை ஓய்ந்துவிட்டது: சு.திருநாவுக்கரசர் 

DIN

உள்நாடு, வெளிநாட்டில் மோடியின் அலை ஓய்ந்துவிட்டது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
திமுக - காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சிகள் கூட்டணி உறுதியாக உள்ளது. உரிய நேரத்தில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

மோடி மீண்டும் பிரதமராக 50சதவீதம் பேர் ஆதரவு என்பதை எதை வைத்து கணக்கிடப்பட்டது. உள்நாடு, வெளிநாட்டில் மோடியின் அலை ஓய்ந்துவிட்டது. மாயாவதி-அகிலேஷ் யாதவ் கூட்டணி பாஜகவுக்கு எதிரானது, காங்கிரசுக்கு எதிரானது அல்ல.

கொடநாடு விவகாரத்தை முதல்வர் சட்ட ரீதியாக அணுகாமல் கைது செய்யும் நடவடிக்கை கூடாது.  கூட்டணிக் கதவை மோடி திறந்து வைத்தாலும், செல்வதற்கு யாரும் தயாராக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT