ஜல்லிக்கட்டு: பெரியசூரியூரில் 40 பேர் காயம்

திருச்சி அருகே உள்ள பெரியசூரியூரில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 40 பேர் காயமடைந்தனர். 
திருச்சி அருகே உள்ள பெரிய சூரியூரில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்க முயலும் வீரர்.
திருச்சி அருகே உள்ள பெரிய சூரியூரில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்க முயலும் வீரர்.


திருச்சி அருகே உள்ள பெரியசூரியூரில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 40 பேர் காயமடைந்தனர். 
திருச்சி அருகே உள்ள பெரியசூரியூரில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கு கோட்டாட்சியர் அன்பழகன் தலைமை வகித்தார். 
திருவெறும்பூர் வட்டாட்சியர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். சங்கிலி கருப்பு கோயில் பெரிய குளத்தில் நடைபெற்ற போட்டியை மக்களவை உறுப்பினர் ப.குமார் தொடங்கி வைத்தார்.
போட்டித் தொடங்கியவுடன் முதலில் நற்கடல்குடி கருப்பண்ணசாமி கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. அதன் பிறகு காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. 
வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்க முயன்றனர். இதில், காளைகள் முட்டியதில் புதுக்குடியை சேர்ந்த ரஜினி (36) , விமானநிலையம் அருகே உள்ள போலீஸ் காலனியை சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் பாலசுப்பிரமணியன் (46), சோமரசம்பேட்டை சந்தாபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் (24) உள்ளிட்ட 40 பேர் காயமடைந்தனர். இவர்களில் 12 பேர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
போட்டியில், 509 காளைகளும், 260 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், சிறந்த காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, மாடுபிடி வீரர்களை திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை நடத்தினர். அதேபோல், கால் நடைத்துறை இணை இயக்குநர் முருகேசன் தலைமையிலான மருத்துவ குழுவினர் காளைகளையும் பரிசோதித்தனர். போட்டியின் இறுதியில் பெரியசூரியூரை சேர்ந்த கோவிந்தன் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டு இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டது. 
போட்டியில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மாவட்ட வருவாய் அலுவலர் தா.சாந்தி, மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ், திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் லலிதாலெட்சுமி, திருவெறும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமமுக நிர்வாகிகள் ஜெ. சீனிவாசன், ஆர். சாருபாலா தொண்டைமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், அரியலூர் மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் மேற்பார்வையில் 550 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com