தமிழ்நாடு

ஸ்டாலின் சிறைக்கு செல்லும் காலம் விரைவில் வரும்: அமைச்சர் சி.வி.சண்முகம்

DIN


விழுப்புரம்: திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிறைக்கு செல்லும் காலம் விரைவில் வரும் என சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசினார். அப்போது, தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். 

ஆட்சியாளர்கள் மீது நாள்தோறும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள். அனைத்து வழக்குகளையும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். 

தற்போது, முதல்வர் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு முதல்வரே மறுப்பு தெரிவித்து பேசியுள்ளார். அதேபோன்று, அண்ணாநகர் ரமேஷ் கொலை வழக்கு, சாதிக்பாஷா மரணம் தொடர்பாக ஸ்டாலின் செய்தியாளர்கள் முன்னிலையில் பதில் அளிக்க முடியுமா? 

மாநில நலனுக்காக மத்திய அரசை ஆதரிக்க வேண்டியபோது ஆதரித்தும், மாநில நலனை பாதிக்கும் நேரத்தில் எதிர்த்தும் அதிமுக செயல்பட்டு வருகிறது. ஆனால், 17 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, மத்திய அரசை எதிர்த்து ஒரு தீர்மானத்தைக் கூட நிறைவேற்றியது கிடையாது. 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில், இந்தியாவிலேயே எந்தவித கோப்புகளும் தேங்காமல் மக்களுக்கு சிறப்பான திட்டங்களை செயல் படுத்தி வரும் ஆட்சியாக அதிமுக ஆட்சி உள்ளது .

அதிமுக ஆட்சியை கலைக்கவே திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சி செய்வருகிறார். அது ஒருபோதும் நடக்காது. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிறைக்கு செல்லும் காலம் விரைவில் வரும் என்றார் அமைச்சர் சி.வி. சண்முகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT