வனக்காப்பாளர் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இணையவழித் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இடஒதுக்கீட்டின்படி பிரிவு வாரியாக அந்த தகவல்கள் வெளியாகியிருப்பதாகவும், விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டு முடிவுகள் மட்டும் அடுத்த சில நாள்களில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்களுக்கு கடந்த மாதத்தில் இணையவழியே தேர்வு நடைபெற்றது. அதற்கான முடிவுகளும், அடுத்தகட்ட தேர்வு பற்றிய தகவல்களும் www.forests.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இடம்பெற்றுள்ளன. இணையவழி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் சென்னையில் விரைவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.