தக்கோலம் - அரக்கோணம் இடையே அகல ரயில் பாதை: 25-இல் சோதனை ஓட்டம்

தக்கோலம்-அரக்கோணம் இடையே புதிய அகல ரயில் பாதையில் வரும் வெள்ளிக்கிழமை (ஜன.25)அதிக வேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.


தக்கோலம்-அரக்கோணம் இடையே புதிய அகல ரயில் பாதையில் வரும் வெள்ளிக்கிழமை (ஜன.25)அதிக வேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.
சென்னை ரயில்வே கோட்டத்தில், அரக்கோணம்-காஞ்சிபுரம்-செங்கல்பட்டு பிரிவில், அரக்கோணம்-தக்கோலம் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய அகல ரயில்பாதையை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையிலான குழுவினர் வரும் வெள்ளிக்கிழமை (ஜன.25) ஆய்வு செய்யவுள்ளனர். இதைத் தொடர்ந்து, தக்கோலம்-அரக்கோணம் ரயில் நிலையங்களுக்கு இடையே அன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை அதிகவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது. இதன்காரணமாக, தக்கோலம்-அரக்கோணம் இடையே ரயில் பாதையை பயன்படுத்துவோர்கள் தண்டவாளத்தை கடக்கவோ, அருகில் வரவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com