தமிழ்நாடு

தமிழகம் வரும் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்: வைகோ திட்டவட்டம்

DIN


மதுரை எய்மஸ் மருத்துவமனைக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அடிக்கல் நாட்ட வரும் பிரதமர் மோடிக்கு மதிமுக சார்பில் கருப்புக் கொடி காட்டப்படும் என்று வைகோ தெரிவித்துள்ளார். 

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். அவர் வரும்போது மதிமுக சார்பில் கருப்புக் கொடி காட்டப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, அவர் கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

"நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், முல்லைப் பெரியாறு மற்றும் மேக்கேதாட்டு போன்ற திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அனுமதி வழங்குகிறது. இந்த திட்டங்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சியை கொடுக்கும். ஆனால், தமிழகத்தை அழித்துவிடும். 

அதனால், பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும் போது மதிமுக நிர்வாகிகள் கருப்புக் கொடி ஏந்துவார்கள். இந்த போராட்டம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எதிரானது அல்ல. தமிழக நலனை புறக்கணித்த காரணத்துக்காக மோடிக்கும், அவருடைய அரசுக்கும் எதிரானது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT