உள்நிலை மாற்றத்துக்கான கருவி ஒவ்வொருவரின் கைகளிலும் இருக்க வேண்டும்: சத்குரு ஜக்கி வாசுதேவ்

உள்நிலை மாற்றத்துக்கான கருவி ஒவ்வொருவரின் கைகளிலும் இருக்க வேண்டும் என்று ஈஷா யோக மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்.
உள்நிலை மாற்றத்துக்கான கருவி ஒவ்வொருவரின் கைகளிலும் இருக்க வேண்டும்: சத்குரு ஜக்கி வாசுதேவ்

உள்நிலை மாற்றத்துக்கான கருவி ஒவ்வொருவரின் கைகளிலும் இருக்க வேண்டும் என்று ஈஷா யோக மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்.
கோவை ஈஷா யோக மையத்தில் ஆண்டுதோறும் குரு பெளர்ணமி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி, 25 ஆம் ஆண்டு குரு பௌர்ணமி விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதில் ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவின் சிறப்பு சத்சங்கம் நடைபெற்றது. அதில் அவர் பேசியதாவது: சுமார் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த குரு பௌர்ணமி தினத்தில்தான் உலகின் முதல் குரு தோன்றினார். ஈஷா யோக மையம் தொடங்கப்பட்டு நேற்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 
உள்நிலை மாற்றத்துக்கான கருவி (யோகா) ஒரு குருவின் கையிலோ அல்லது ஒரு அமைப்பின் கையிலோ இருக்க கூடாது. ஒவ்வொரு மனிதனின் கைகளிலும் இருக்க வேண்டும்.
ஈஷா யோக மைய பயிற்சிகளை ஆன்லைன் மூலம் இலவசமாக வழங்க உள்ளோம். முதல் கட்டமாக, தற்போது, ஆங்கிலம், ஹிந்தி, ரஷ்ய மொழிகளில் யோகா கற்றுக்கொடுக்க உள்ளோம். கூடிய விரைவில் உலகில் உள்ள பெரும்பாலான மொழிகளிலும் ஈஷா சார்பில் யோகா வகுப்புகளை நடத்த இருக்கிறோம் என்றார்.
இதைத் தொடர்ந்து விழாவில் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினரின் இசை நிகழ்ச்சியும், ஆதியோகி திவ்ய தரிசனம் என்ற 3டி ஒளி, ஒலி காட்சியும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com