வேலூர் மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களின் செலவினத்தைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் தொடர்பான செலவினங்களைக் கண்காணிப்பதற்காக, ஓய்வு பெற்ற இந்திய வருவாய்ப் பணி அதிகாரி பி.முரளிகுமார் சிறப்பு செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, மாநிலத்தின் பிற அதிகாரிகளுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனைகளை நடத்துவார்.
தேர்தலில் முறையற்ற வகையிலான பண பலத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அவர் கண்காணிப்பார் என்று தனது அறிவிப்பில் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.