காவிரியில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவை கர்நாடகா அதிகரித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக பருவமழை தீவிரமாக பெய்துவரும் சூழலில் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வந்ததை அடுத்து காவிரி மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியதையடுத்து முதல்வர் குமாரசாமி உத்தரவின்படி, கபினி மற்றுபம் கேஆர்எஸ் அணையிலிருந்து 2,500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்தது.
இதனிடையே, கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் நாளை முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்ற அறிவிப்பால் மஞ்சள் நிற அலர்ட் விடுக்கப்பட்டது.
இந்நிலையில், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு கேஆர்எஸ் அணையில் இருந்து விநாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.