தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவ மழை தொடங்கிய நிலையில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வாரம் ஓரளவுக்கு தூறல் முதல் லேசான மழை பெய்து கடுமையான வெப்பத்தை சற்று தணித்தது.
இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, வேலூர், விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்றும் நாளையும் லேசானது முதல் பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.