அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய பதிவாளராக (பொறுப்பு) பேராசிரியர் கருணாமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளராக (பொறுப்பு) இருந்த பேராசிரியர் குமார் பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, புதிய பதிவாளரை நியமிப்பதற்கானத் தேர்வை பல்கலைக்கழகம் மேற்கொண்டது.
இதற்கு பல்கலைக்கழகத்தில் பல பேராசிரியர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தனர். இதில் பல்கலைக்கழகத்தின் இயந்திரவியல் துறை பேராசிரியரான கருணாமூர்த்தி புதிய பதிவாளராக (பொறுப்பு) தேர்வு செய்யப்பட்டு புதன்கிழமை நியமிக்கப்பட்டார்.