அரவக்குறிச்சி சுங்கச்சாவடியில் 5.63 கிலோ தங்க நகைகள் பறிமுதல் 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சுங்கச்சாவடியில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய வாகனச் சோதனையில் 5.63 கிலோ தங்க நகைகளை அதிகாரிகள்
அரவக்குறிச்சி சுங்கச்சாவடியில் 5.63 கிலோ தங்க நகைகள் பறிமுதல் 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சுங்கச்சாவடியில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய வாகனச் சோதனையில் 5.63 கிலோ தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சுங்கச்சாவடியில் தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலத்தில் உள்ள நகைக்கடைக்கு நகைகளை வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.5.63 கோடி மதிப்பிலான தங்க நகைகளை  பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அதேபோன்று மதுரையில் வேனில் எடுத்து வரப்பட்ட ரூ.3.64 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் பறிமுதல் செய்தனர் பறக்கும்படை அதிகாரிகள். அவர்களிடம் உள்ள ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன.

நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலைத்தில் 4.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com