"பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடைபெறாது': கனிமொழி

பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடத்தமாட்டார்கள். அனைத்து மாநிலங்களையும் விலைக்கு வாங்கி விடுவார்கள் என தி.மு.க., மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார்.
"பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடைபெறாது': கனிமொழி

பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடத்தமாட்டார்கள். அனைத்து மாநிலங்களையும் விலைக்கு வாங்கி விடுவார்கள் என தி.மு.க., மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி,  பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் சம்பத்குமார் ஆகியோருக்கு ஆதரவு திரட்டி கமுதியில் வியாழக்கிழமை கனிமொழி பேசியது:  அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு எவ்வித குறிக்கோளும் கிடையாது. ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்த மோடி, கருப்புப் பணத்தை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயம் பொய்த்துள்ளபோதிலும்,  2 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம், பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. வெள்ளம், புயல், வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகள், பொதுமக்களை பார்க்க வராத மோடி, தேர்தலுக்காகவும், சுயலாபத்திற்காகவும் மட்டுமே தமிழகத்திற்கு வருவது, தமிழர்களை வஞ்சிப்பதாக உள்ளது.  ராமநாதபுரத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.

ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க திமுக ஆட்சியில் கொண்டு வந்த நரிப்பையூர் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம், காவிரி கூட்டு குடிநீர்த் திட்டம் ஆகியவற்றை அதிமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முடக்கியது. எனவே முடக்கப்பட்ட இத்திட்டங்கள் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்தப்படும். வாலிநோக்கம் அரசு உப்பள நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்ப்பது தடுக்கப்பட்டு, அப்பகுதி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை எடுக்கபடும்.

மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடத்தமாட்டார்கள். அனைத்து மாநிலங்களையும் விலைக்கு வாங்கி விடுவார்கள் என்றார்.  பிரசாரத்தில் ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் காதர்பாட்சாமுத்துராமலிங்கம், ஒன்றியச் செயலாளர் வாசுதேவன் உள்பட கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர். இதேபோல் வியாழக்கிழமை மாலை நவாஸ்கனிக்கு ஆதரவாக சாயல்குடியிலும் கனிமொழி பிரசாரம் மேற்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com