கோவையில் கமல் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம் தடுத்து நிறுத்தம் 

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கோவையில் கமல் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம் தடுத்து நிறுத்தம் 

சிங்காநல்லூர்: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியலை தலைவர் கமல்ஹாசன் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்.

மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் கட்சியின் தேர்தல் அறிக்கையினை ஞாயிறு அன்று (24.03.19) கோவையில் வெளியிடுவேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.  

இந்நிலையில் கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம் தடுத்து நிறுத்தபட்டுள்ளது.

ஞாயிறு காலை கோவை வந்த கமல்ஹாசன் சிங்காநல்லூர் அருகே உள்ள ராமநாதபுரம் என்னும் இடத்தில் கட்சியினரின் கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் அந்த கூட்டத்தை தடுத்து நிறுத்தினர்.

முறையான அனுமதியின்றி நிகழ்ச்சி நடைபெற்றதாக கூறி தேர்தல் பறக்கும் படையினர் இந்த நடவடிக்கையை எடுத்தனர்.

இதன் காரணமாக அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com