கடற்கரை-திருமால்பூருக்கு இயக்கப்பட்ட மின்சார ரயிலில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால், ரயில் சேவை தாமதமாகியது.
சென்னை கடற்கரையில் இருந்து சனிக்கிழமை இரவு 7.10 மணிக்கு திருமால்பூருக்கு மின்சார ரயில் புறப்பட்டது. இந்த ரயில் மாம்பலம் ரயில் நிலையம் வந்தபோது, இயந்திர கோளாறு ஏற்பட்டது. அதனை சரி செய்யும் பணி நடைபெற்றது.
கோளாறு சரிசெய்யப்பட்டு, 20 நிமிஷத்துக்குப் பிறகு மீண்டும் ரயில் இயக்கப்பட்டது. இதன் காரணமாக, பயணிகள் சிறிதுநேரம் அவதிப்பட்டனர்.