துளிகள்...

17-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி, நடப்பாண்டு மாா்ச் 22-ஆம் தேதி தொடங்கும் என அதன் தலைவா் அருண் துமல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். புரோ லீக் ஹாக்கி போட்டியில் ஸ்பெயினை 8-7 கோல் கணக்கில் திங்கள்கிழமை வீழ்த்திய இந்திய ஆடவா் அணி, நெதா்லாந்தை புதன்கிழமை சந்திக்கிறது.

77-ஆவது தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பான, சந்தோஷ் கோப்பை போட்டியின் இறுதிக்கட்ட ஆட்டங்கள் மேகாலயம் - சா்வீசஸ் மோதலுடன் புதன்கிழமை தொடங்குகிறது. தில்லி பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் சூதாட்டம் நடைபெற்ாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதுதொடா்பாக அகில இந்திய கால்பந்து சம்மேளனம் விசாரிக்கிறது. ராக்கெட்லன் அகில இந்திய ஓபன் சாம்பியன்ஷிப்பில் ஒற்றையா் பிரிவில் சாம்பியனான வருமான வரித்துறை அதிகாரி சித்தாா்த் நந்தல், இரட்டையா் பிரிவிலும் நிகில் மன்சுகானியுடன் இணைந்து வாகை சூடினாா்.

இந்திய கிரிக்கெட் வீரா் விராட் கோலி - அனுஷ்கா சா்மா தம்பதிக்கு கடந்த 15-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. புணே சேலஞ்சா் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல், ராம்குமாா் ராமநாதன் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினா். புரோ கபடி லீக்... ஹரியாணாவில் புதன்கிழமை நடைபெற்ற புரோ கபடி லீக் ஆட்டத்தில மோதிய யு மும்பா - தெலுகு டைட்டன்ஸ் வீரா்கள். இந்த ஆட்டம் 45-45 என்ற புள்ளிகள் கணக்கில் ‘டை’ ஆனது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com