தமிழ்நாடு

திருமலை நாயக்கர் மகாலில் லேசர் முறையில் ஒலி-ஒளிக் காட்சி

DIN

மதுரை திருமலை நாயக்கர் மகாலில் லேசர் முறை ஒலி-ஒளிக் காட்சி அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான கருத்துரு மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 மதுரையிலுள்ள திருமலைநாயக்கர் மகால் கி.பி.1636 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புராதனச் சின்னமாகும். மதுரை வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலுக்கு அடுத்தபடியாக திருமலைநாயக்கர் மகாலையே அதிகம் பார்வையிடுகின்றனர்.  தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மகாலில் கடந்த 1981 ஆம் ஆண்டு ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டை முன்னிட்டு ஒலி-ஒளிக் காட்சி அமைக்கப்பட்டது. தினமும் இரவு இரு காட்சிகளாக நடைபெறும் ஒலி-ஒளிக் காட்சியின் மூலம் மதுரை வரலாற்றை தமிழ், ஆங்கிலத்தில் பார்வையாளர்களுக்கு விளக்குகின்றனர்.

 தினமும் குறைந்தது 300 பேர் ஒலி-ஒளிக் காட்சியை கட்டணம் செலுத்தி பார்க்கின்றனர். கடந்த 2009 ஆம் ஆண்டு பல லட்ச ரூபாய் செலவில் ஒலி-ஒளிக்காட்சியானது டிஜிட்டல் முறைக்கு மாற்றி நவீனப்படுத்தப்பட்டது.   ஒலி-ஒளிக் காட்சியின் விளக்கங்களும் புதிதாக அமைக்கப்பட்டன. பாண்டிய மன்னர்கள் வரலாறு, கண்ணகி நீதி கேட்டது என பல விஷயங்களில் புதுமை புகுத்தப்பட்டன. தற்போது ஒலி-ஒளிக்காட்சி சாதனங்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனால் காட்சிகள் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஒலி-ஒளிக்காட்சியை லேசர் முறைக்கு மாற்றிட மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறினர்.

 தற்போதைய டிஜிட்டல் ஒலி-ஒளிக் காட்சியை லேசர் முறையில் மாற்றிட பல கோடி செலவாகும். மதுரையை பொலிவுறு நகர் திட்டத்தில் அறிவிக்கும் நிலையில், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் மகாலில் லேசர் முறையில் ஒலி-ஒளிக் காட்சி நவீனப்படுத்தப்பட உள்ளதாகவும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT