(கோவை ரயில் நிலையம் அருகே ஓர் ஆட்டோவின் பின்புறத்தில்)
இருட்டைச் சபிக்காதே;
ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி
இருட்டை விரட்டு.
கே.விஜயலட்சுமி, திருப்பத்தூர்.
(சென்னை மாதவரம் மகாவீர் எஸ்டேட் அருகில் உள்ள ஒரு
பகுதியின் பெயர்)
பாயசம் பாக்கம்
சி.மாரீஸ்வரி சந்திரன், கீழ்கட்டளை.
(வேதாரண்யத்தில் உள்ள ஒரு தனியார் பேருந்தில்)
எங்கள் பஸ்ஸில் உள்ள இருக்கைகள்
மனிதர்களிடையே
பாகுபாடு பார்ப்பதில்லை.
எஸ்.ராதாகிருஷ்ணன், மன்னார்குடி.
யோசிக்கிறாங்கப்பா!
கணவனிடம் மனைவி தோற்க வேண்டும்.
மனைவியிடம் கணவன் தோற்க வேண்டும்.
அப்போதுதான், குடும்பம் ஜெயிக்கும்.
அ.பூங்கோதை, செங்கல்பட்டு.
(கொள்ளிடம் - ஆலக்குடி சாலையில் உள்ள திருமண மண்டபம் அருகே
இளைஞர்கள் இருவர்)
""ஏன்டா மாப்பிளே சோகமா இருக்கே?''
""என்னுடைய செருப்பை இங்கே கழற்றிப் போட்டேன். காணோம்டா''
""உள்ளே ஒரு ஜோடி சேர்ந்திடுச்சு. வெளியே ஒரு ஜோடி காணாமப் போயிடுச்சு''
அ.ப.ஜெயபால், கொள்ளிடம்.
(சென்னை திருவல்லிக்கேணி பெரிய தெருவில் இருவர்)
""வேஷ்டி ரொம்பவும் அழுக்கா இருக்கே... பக்கம் மாத்தியாவது கட்டிக்கக் கூடாதா?''
""கட்டிக்கலாம்தான்... ஆனா ஒரு வேஷ்டிக்கு மூணு பக்கம் இல்லீங்களே...''
ஜா.ரவி, தஞ்சாவூர்.
ஒரு பேராசிரியர் மாணவர்களின் முன் ஒரு சோதனையை நிகழ்த்திக் காட்டினார்.
ஒரு பெண் எலியை பெஞ்சின் ஒரு மூலையில் நிற்க வைத்தார். ஓர் ஆண் எலியை அதற்கு நேர் எதிரான இன்னொரு மூலையில் நிற்க வைத்தார். இரண்டு எலிகளுக்கும் நடுவே சம தூரத்தில் ஒரு கேக்கை வைத்தார். ஆண் எலி வேகமாக வந்து கேக்கைத் தின்றுவிட்டுச் சென்றது. பெண் எலி கேக் இருந்த பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை. சில நிமிடங்கள் கழித்து ஒரு ரொட்டித் துண்டை வைத்தார். அப்போதும் ஆண் எலி வேகமாக வந்து ரொட்டித் துண்டைத் தின்றுவிட்டு பெண் எலியைப் பார்க்காமல் சென்றது. மாணவர்களிடம் பேராசிரியர், ""பார்த்தீர்களா மாணவர்களே... ஓர் ஆண் எலிக்கு இருக்கும் அறிவு கூட மனிதர்களாகிய நம்மில் பலருக்கும் இருப்பதில்லை. பெண் எலிப் பக்கம் திரும்பிப் பார்க்காமல் எவ்வளவு கம்பீரமாக ஆண் எலி இருக்கிறது பார்த்தீர்களா?'' என்று பெருமையுடன் சொன்னார்.
உடனே ஒரு மாணவன் எழுந்து சொன்னான்: ""அந்த பெண் எலி, ஆண் எலியுடைய மனைவி சார்...''
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
நடந்ததை நினைத்தால் நண்பன் பகைவனாவான்...
நடந்ததை மறந்தால் பகைவன் நண்பனாவான்.
நெ.இராமன், சென்னை-74.
என்.ஜே., சென்னை-116.