""பஸ்ல சீட் இருந்தும்
நின்னுக்கிட்டே வந்தியா... ஏன்?''
"" சீட்ல எல்லாரும்
உட்கார்ந்துகிட்டு இருந்தாங்களே''
கே.செüமியா, சென்னாவரம்.
""மொய்க்குப் பணம் கொடுக்காம
ஏன் உன் பையன்கிட்ட
செக் கொடுத்து அனுப்புற?''
""பணமா கொடுத்தா பாதியை அமுக்கிடுறான்''
ம.வேதவள்ளி, பொரவச்சேரி.
""தனியா இருந்து ஏன் கஷ்டப்படுறீங்க...
கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே?''
""இதை விட அது பெரிய கஷ்டம் ஆச்சே''
க.நாகமுத்து, திண்டுக்கல் .
ஆசிரியர்: என்ன கொஸ்டீன் பேப்பர்
இவ்வளவு ஈரமா இருக்கு?
மாணவன்: லீக்கான கொஸ்டீன்
பேப்பராச்சே சார்!
டி.மோகனதாஸ், நாகர்கோவில்.
""அந்த அம்மா நகையை அத்துட்டு
திருடன்ஓடுறானா? திருடன் பின்னால
இப்படி ஓடுறாங்களே? ''
""அந்த அம்மா பிடிச்சு வச்சிருந்த
இரண்டு குடம் தண்ணியைத் திருடிட்டானாம்''
ஆர்.மகாதேவன், திருநெல்வேலி.
""ஜவுளிக்கடைக்காரர் உஷார் பேர்வழின்னு
எப்படிச் சொல்றீங்க?''
""ஐந்து புடவை வாங்கினா ஐந்து புடவை இலவசம். கூட வர்ற கணவனுக்கு உட்கார சேர் இலவசம்ன்னு போர்டு வச்சிருக்கிறாரே''
அ.செல்வகுமார், சென்னை-19.