உலகின் பெரும் பணக்காரர்கள் பற்றி ஆண்டுதோறும் கணக்கெடுப்பு நடக்கும். அதன்படி உலகின் பெரும் பணக்காரர்கள் 15 நாடுகளில் தான் அதிகம் குவிந்துள்ளனர். அவை:
அமெரிக்கா: இங்கு 705 பில்லியனர்கள் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் நியூயார்க், சான்பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் வசிக்கின்றனர்.
சீனா: 285 பில்லியனர்கள் இங்கு உள்ளனர். இப்போது இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. காரணம் அமெரிக்கா}சீனா இடைய நடக்கும் வர்த்தக யுத்தம்.
ஜெர்மனி: 146 பில்லியனர்கள் இங்கு இருக்கிறார்கள். ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடு. அதனால் உருவானவர்கள் இந்த பில்லியனர்கள்.
ரஷ்யா: 102 பில்லியனர்கள் உள்ளார்கள். பொருளாதாரத்தில் ரஷ்யா நல்ல முன்னேற்றம் கண்டதின் விளைவு பில்லியனர்கள் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.
பிரிட்டன்: 97 பில்லியனர்கள் இங்கு வசிக்கிறார்கள். முன்பை விட 16 சதவிகிதம் குறைந்து விட்டனர்.
ஸ்விட்சர்லாந்து: இங்கு 91 பில்லியனர்கள் இருக்கிறார்கள். சாக்லெட்ஸ் மற்றும் வைரம் விற்பனையே இந்த பில்லியனர்களின் எண்ணிக்கைக்கு காரணம்.
ஹாங்காங்: 87 பில்லியனர்கள் உள்ளனர். வீடு கட்டும் தொழில் சார்ந்த கட்டட தொழிலில் சம்பாதித்து பில்லியனர்கள் ஆனவர்கள் அதிகம்.
இந்தியா: 82 பில்லியனர்கள். இதில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 50 பில்லியன் டாலர். நாட்டின் 73 சதவிகித சொத்து மதிப்பு 1 சதவிகித பணக்காரர்களிடம் மட்டுமே உள்ளது.
சவுதி அரேபியா: 57 பில்லியனர்கள் இருக்கிறார்கள். பெட்ரோலிய பொருட்கள் விற்பனை மற்றும் ஏற்றுமதி மூலமே இந்த பில்லியனர்கள் உருவாகியுள்ளனர்.
பிரான்ஸ்: 55 பில்லியனர்கள் உள்ளனர். சொகுசு மற்றும் பேஷன் வியாபாரத்தில் முதன்மை வகிக்கும் பிரான்ஸ், அவற்றின் மூலமே பல பில்லியனர்களை உருவாக்கியுள்ளது.
- ராஜிராதா, பெங்களூரு
* உலக நாடுகளில் பராகுவே நாட்டின் கொடியில் மட்டுமே ஒவ்வொரு புறமும் ஒவ்வொரு விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
* ராமாயணம் கதாபாத்திரத்தை தன் பெயராக வைத்துள்ள நடிகர் சத்ருகன் சின்ஹா தனது இல்லத்திற்கு ராமாயணா என பெயர் வைத்துள்ளார்.
- க.ரவீந்திரன், ஈரோடு