முக நூலிலிருந்து....
• இன்றையப்
பட்டியலில்
சூரியனின்
முதல் வேலை
பனியில்
முகம் பார்ப்பது
-அமுதபாரதி
• இளகின இதயம் என்றாலும்
கல்நெஞ்சு என்றாலும்
இதயத்தின் ஒழுங்கான இயக்கமே
நம் இருப்பின் அடையாளம்.
- சாந்தா தேவி
• முட்கம்பிகளுக்குள் நிலா,
முடிந்தவரை போராடினேன்
மீட்பதற்கு,
கைதொட்டு காப்பாற்றும்
தூரம் சென்றபின்....
நிலா சொல்கிறது...
உன் கைகளில் ரத்தக்காயம்....
எனை தொட்டுவிடாதே என்று..!
- நா.நிரோஷ்
சுட்டுரையிலிருந்து...
• முன்னாடியெல்லாம் யாராவது கேள்வி கேட்டு பதில்
தெரியலைன்னா
தரையப் பார்த்தோம்.
இப்போ மொபைல
பார்க்கிறோம்.
அவ்ளோ தான் சார் வாழ்க்க ????
- நாடோடி
• என்னோடு நீ இருக்கும்
நிமிடங்கள் உறைந்து போக...
கடிகாரத்தில் இருந்து பேட்டரியை அகற்றி விட்டேன்.
- மிஸ்டர் ஆங்க்ரி
• முதல் நாள் முதல் காட்சி படம் பார்த்துவிட்டு விமர்சனம்
பண்றவங்களும் முதல் தடவை ஓட்டு போட்டுவிட்டு
வருபவர்களும் ஒன்னு..தங்களால்தான் வெற்றி என்ற
மனப்பான்மையோடு இருப்பார்கள் !
- மெத்த வீட்டான்
வலைதளத்திலிருந்து...
ஒரு ஜென் கதை சொல்கிறார். சமுராய் ஒருவன் ஞானி ஒருவரிடம் சொர்க்கம் என்றால் என்ன, நரகம் என்றால் என்னவென்று விளக்கச் சொல்கிறான். "உன்னைப் போன்ற முட்டாளுக்கு எல்லாம் அதை ஏன் நான் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்', என்று கேட்கிறார் ஞானி. இதனால் ஆத்திரமடையும் சமுராய் கத்தியை எடுத்துக் கொண்டு அவரைக் கொல்லப் பாய்கிறான். "இதுதான் நரகம்', என்கிறார் ஞானி. சமுராய் ஒரு கணம் தாமதிக்கிறான், உண்மை உரைக்கிறது. "இதுதான் சொர்க்கம்', என்கிறார் ஞானி. கோபம் என்பது அவலம், அறியாமை, ஞானம் அதன் எதிரிடை. மேலும், ஆத்திரப்படுபவன் சுலபமாய் சூத்திரதாரிகளின் கைப்பாவையாவான்.
https://solvanam.blog