இம்மாதம் வெளியான "கேதார்நாத்' இந்தி படம் 2013- ஆம் ஆண்டு உத்தரகாண்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை பின்னணியாக வைத்து எடுக்கப் பட்டதாகும். இதில் முன்னாள் நடிகை அம்ரிதாசிங் மற்றும் அவரது முன்னாள் கணவர் சயிப் அலிகானின் மகள் சாரா அலிகான் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். "இந்த ஆண்டின் புதுமுகமாக அறிமுகமான நான், நடிப்பை கற்க எந்த திரைப்பட கல்லூரிக்கும் சென்றதில்லை. செட்டில் இயக்குநர் அபிஷேக் கபூர் என்ன சொல்லிக் கொடுத்தாரோ அதன்படி நடித்தேன்'' என்று கூறும் சாரா அலிகானின் அடுத்த படமான "சிம்பாவும்' இம்மாதம் 28-ஆம் தேதி வெளியாகிறது. ஒரு அறிமுக நடிகையின் இருபடங்கள் அடுத்தடுத்து ஒரே மாதத்தில் வெளியாவது பாலிவுட்டில் இதுவே முதல் முறையாம்.