பிரபல பாலிவுட் நடிகை ஷபனா ஆஷ்மி (67) அவரது தந்தை கைஃபி ஆஷ்மி நிறுவிய தன்னார்வ தொண்டு நிறுவனமான "மிஜ்வான்' சமூகநல அமைப்பை தொடர்ந்து நடத்தி வருகிறார். "இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 80 சதவீத மக்கள் வசிக்கும் கிராமங்களில்தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் திறமைக்கு நாம் மதிப்பளிப்பதில்லை. என் தந்தை கிராமப்புற மக்களுக்காக வேலை வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும் என்று தொடங்கிய இந்த சமூக அமைப்பின் மூலம், உத்திரபிரதேசம் மிஜ்வான் கிராமப் பெண்கள் தயாரிக்கும் சிக்கன்காரி எம்ப்ராய்டரி ஆடைகளையும், கைவினை கலைஞர்களின் திறமைகளையும் வெளி உலகம் அறிந்தது. தொடர்ந்து இந்த அமைப்பின் மூலம் மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவதில் பெருமைப்படுகிறேன்'' என்கிறார் ஷபனா ஆஷ்மி.