மகளிர்மணி

தீபாவளி ஸ்பெஷல் சமையல்!

DIN

பிரெட் குலாப் ஜாமுன்

தேவையானவை:
ப்ரெட் - 3 துண்டுகள்
சர்க்கரை - முக்கால் கிண்ணம்
தண்ணீர் - அரை கிண்ணம்
பால் பவுடர் - 3 தேக்கரண்டி
கன்டன்ஸ்டு மில்க் - 3 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை: ப்ரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக்கி எடுத்துக் கொள்ளவும். சர்க்கரையுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி கொள்ளவும். ப்ரெட்டை நன்கு உதிர்த்துவிட்டு கன்டன்ஸ்டு மில்க், பால் பவுடர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள ப்ரெட் கலவையை உருண்டைகளாக உருட்டி குறைந்த தீயில் வைத்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். பொரித்த உருண்டைகளை சர்க்கரைப் பாகில் போட்டு ஊற வைத்தால் சுவையான பிரெட் குலாப் ஜாமுன் ரெடி. 

பட்டர் முறுக்கு

தேவையானவை: 
கடலை மாவு - ஒரு கிண்ணம் 
அரிசி மாவு - ஒரு கிண்ணம்
வெள்ளை எள் - ஒரு தேக்கரண்டி 
வெண்ணெய் -கால் கிண்ணம்
உப்பு -தேவையான அளவு 
எண்ணெய் -பொரிக்கத் தேவையான அளவு. 
செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெண்ணெய்யையும் உப்பையும் போட்டு, நன்றாகக் பிசைந்து கொள்ளவும். பிறகு, கடலை மாவையும் அரிசி மாவையும் போட்டு, எள்ளையும் சேர்த்து, நீர்விட்டுப் பிசையவும். முறுக்கு அச்சில் மாவைப் போட்டு, காயும் எண்ணெய்யில் பிழிந்து, வேக வைத்து எடுக்கவும்.

ரிப்பன் பகோடா

தேவையானவை:
புழுங்கல் அரிசி- 1 கிண்ணம் 
கடலை மாவு- அரை கிண்ணம்
பொட்டுக்கடலை மாவு- அரை கிண்ணம் 
மிளகாய்த்தூள்- 1 தேக்கரண்டி
பெருங்காயப்பொடி- அரை தேக்கரண்டி 
டால்டா- 3 மேசைக்கரண்டி 
தேவையான - உப்பு 
செய்முறை: புழுங்கலரிசியை போதுமான நீரில் 6 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு கெட்டியாக அரைக்கவும். அதில் மற்ற எல்லா பொருள்களையும் கலந்து பிசையவும். ரிப்பன் பகோடா அச்சுள்ள குழாயில் மாவை நிரப்பி சூடான எண்ணெய்யில் பொரித்தெடுக்கவும்.

ரசகுல்லா

தேவையானவை: 
பால் - 1 லிட்டர் 
பொடித்த சர்க்கரை - 150 கிராம்
பாகு காய்ச்ச சர்க்கரை - அரை கிலோ
செய்முறை: சூடான பாலில் சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து, பாலைத் திரிய வைக்கவும். அதை, சுத்தமான, மெல்லிய துணியில் கட்டி, தண்ணீரை வடிய விடவும். திரிந்த பகுதியைத் திரட்டி வேறு பாத்திரத்தில் போட்டு, பொடித்த சர்க்கரை கலந்து, கையால் நன்கு பிசையவும். 
இந்தக் கலவை நன்கு மிருதுவாகும் வரை பிசைய வேண்டும். பிறகு, சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். வேறு ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, பாகு காய்ச்சவும். 
சர்க்கரை நன்கு கரைந்து, ஐந்து நிமிடம் கொதித்ததும் அதில் இந்த உருண்டைகளைப் போட்டு மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். சூடான ரசகுல்லா ரெடி! 

பனீர் பர்ஃபி 

தேவையானவை: 
பனீர் - கால் கிலோ, சர்க்கரை - 150 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - 50 கிராம், குங்குமப்பூ - 1 சிட்டிகை, நட்ஸ் கலவை - ஒரு கிண்ணம், சர்க்கரை சேர்த்த கோவா - 100 கிராம், பால் - கால் லிட்டர், வெள்ளித்தாள் - அலங்கரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: நட்ஸில் இருந்து அலங்கரிக்க சிறிதளவு தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள நட்ஸை 3 தேக்கரண்டி நெய் ஊற்றி வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பனீர் மற்றும் கோவா தனித்தனியாக துருவி வைத்து கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றிக் கொதிக்கவிடவும். இதில் துருவிய பனீரை சேர்த்து, கைவிடாமல் கிளறி அதனுடன் சர்க்கரை சேர்த்துக் கெட்டியாகும் வரை கிளறவும். இதனுடன் துருவிய கோவா, பொடித்த நட்ஸ், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்துக் கையெடுக்காமல், அடுப்பை மிதமான தீயில் வைத்து, நன்கு கிளறவும். இப்போது மீதி உள்ள நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்துக் கிளறி, கையில் ஒட்டாத பதம் வந்ததும் கலவையை நெய் தடவிய டிரேயில் ஊற்றிச் சமப்படுத்தவும். நட்ஸ், வெள்ளித்தாள் கொண்டு அலங்கரித்து துண்டுகள் போடவும். சுவையான பனீர் பர்ஃபி ரெடி.

பாம்பே காஜா

தேவையானவை: மைதா மாவு - 150 கிராம், சர்க்கரை - 200 கிராம்
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, கொப்பரைத் துருவல் - 2 தேக்கரண்டி, உப்பு - ஒரு சிட்டிகை, கேசரி கலர் - சிறிதளவு
செய்முறை: மைதாவுடன் உப்பு, நீர் சேர்த்து கெட்டியாகப் பூரி மாவு பதத்திற்கு பிசைந்து மெல்லியதாக சிறிய அப்பளம் போல் திரட்டவும். பின்னர், அதைப் பாதியாக மடித்து, மீண்டும் அதை பாதியாக மடித்து எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும். சர்க்கரையில் சிறிதளவு நீர் விட்டு, கம்பிப் பதத்தில் பாகு காய்ச்சி, கேசரி கலர், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பொரித்த காஜாவை இதில் தோய்த்து எடுத்து தட்டில் வைத்து, கொப்பரையைத் தூவவும். சுûயான பாம்பே காஜா ரெடி.

தீபாவளி லேகியம்

 தேவையானவை:
ஓமவல்லி இலை - 10, துளசி இலை - 10, இஞ்சி - 1 துண்டு, லவங்கம் - 3, நெய் - 2 தேக்கரண்டி, மிளகு - 10, தேன் - சிறிதளவு
செய்முறை: மிளகு, லவங்கத்தை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். ஓமவல்லி, துளசி, இஞ்சியை விழுதாக அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, நெய்யை விடவும். அரைத்த விழுது, பொடித்து வைத்துள்ள பொடி சேர்த்து நன்கு வதக்கவும். லேகியம் போல் ஆனதும் இறக்கி ஆறவைத்து, தேன் சேர்க்கவும். இந்த லேகியம் ஜீரணத்துக்கு நல்லது.
- தவநிதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

SCROLL FOR NEXT