சமூக பிரச்னைகளில் ஆர்வம்!

மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தும் நடிகை கங்கனா ரணாவத், மீண்டும் பாலிவுட்டில் யாரையும் குறிப்பிடாமல் தன் கருத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
சமூக பிரச்னைகளில் ஆர்வம்!

மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தும் நடிகை கங்கனா ரணாவத், மீண்டும் பாலிவுட்டில் யாரையும் குறிப்பிடாமல் தன் கருத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். " உங்கள் தேவையை பேசுவதற்காக மட்டுமே இந்த நட்சத்திர அந்தஸ்து கிடைக்கவில்லை. பிரபலமானவர்களை மட்டுமே படம் பிடிக்கும் காமிராக்கள் நாட்டின் பல பிரச்னைகளை படம் பிடிப்பதே இல்லை. திரையுலகில் உள்ள பலர், நமக்கு குடிநீர், மின்சார விநியோகம் போன்ற பிரச்னைகள் ஏதும் இல்லாதபோது நாம் ஏன் அதை பற்றி பேச வேண்டுமென கேட்கிறார்கள். இந்த நாட்டில் வசிக்கும் நாம் இப்படி பேசுவது என் மனதை மிகவும் வருத்துகிறது. இப்படி ஒதுங்குவது சரியல்ல'' என்கிறார் கங்கனா ரணாவத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com