திரையுலகில் நடிகைகளுக்கு ஏற்படும் தொல்லைகளை வெளிஉலகுக்கு தெரியப்படுத்த போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி, தெலுங்கு பட உலகில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக தற்போது சென்னையில் குடியேறியுள்ளார். இவரை வைத்து "ரெட்டி டைரி' என்ற பெயரில் சித்திரை செல்வன் படமொன்றை தயாரிக்கிறார். "இத்திரைப்படம் என்னுடைய வாழ்க்கையை அடிப்படையாக கொண்டதல்ல. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதை'' என்கிறார் ஸ்ரீரெட்டி.
- அருண்