கட்டட கலைஞர்.. நடன மங்கை.. ஹோட்டல் அதிபர் என பல முகங்களை தன்னகத்தே கொண்டவர் கிருத்திகா சுப்ரமணியன் (44). ஒரே சமயத்தில் பலவற்றில் மனதை செலுத்தி; அனைத்திலும் வெற்றி பெறும் திறன்கொண்டவர்.
அந்த வகையில், தற்போது இவர் கையில் எடுத்திருப்பது எழுத்துத்துறையை.
ஆம், இவர் எழுதிய ‘பதஉஅநமதஉந’ என்ற புத்தகம் சமீபத்தில் வெளியானது.
தஞ்சாவூருடன் இவருக்கு நெருங்கிய உறவு உண்டு. 7-ஆம் வயதில் அங்குதான் பரத நாட்டியம் கற்கத் தொடங்கினார். அது மட்டுமல்ல தஞ்சை பற்றிய அனைத்தும் இவருக்கு அத்துப்படி.
""பார்க்கவேண்டிய முக்கிய இடங்களை வருங்கால சந்ததியினருக்கு உணர்த்துவதே தன் நோக்கம்'' என கூறும் கிருத்திகா, இனி வருடம் ஒரு புத்தகம் இது சார்ந்து எழுத திட்டமிட்டுள்ளாராம்.