பீர்க்கங்காய் செடியின் வேர், இலை, காய், பூ அனைத்தும் மருத்துவ குணங்கள் பெற்ற ஒன்று.
இரும்புச் சத்து, நார்ச் சத்து, பாஸ்பரஸ் மட்டுமில்லாமல் பல வைட்டமின் சத்துகளும், தாது உப்புகளும் இதில் அடங்கியுள்ளன.
பீர்க்கங்காயை உண்டு வந்தால் நீரழிவு, தோல் நோய், ரத்த சோகை, கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் அகலும்.
பீர்க்கன் இலையில் சாறெடுத்து, அதை கொதிக்க வைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் பருகி வந்தால், சர்க்கரை நோய், ரத்த சோகை நோய்கள் கட்டுப்படும்.
பீர்க்கன் இலையை அரைத்து, புண்களில் தடவிக்கட்டுப் போட்டால், ஆறாத புண்கள் கூட ஆறிவிடும்.
சொரி, சிறங்கு, போன்ற அரிப்பு நோய்களுக்கும் பீர்க்கன் இலைச் சாறு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
வாரத்தில் ஒருநாள் சமையலில் சேர்த்துக் கொண்டால் போதும், நோய்கள் வராமல் தடுக்கலாம்.
பீர்க்கங்காயில் சாம்பாரும், பருப்புக் கூட்டும் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
- சு.இலக்குமணசுவாமி, மதுரை