நடிக்க வாய்ப்பளியுங்கள்! - நீனா குப்தா

நடிக்க வாய்ப்பளியுங்கள்! - நீனா குப்தா

இந்தியாவைப் பொருத்தவரை ஒரு பெண் 40 அல்லது 50 வயதை நெருங்கிவிட்டால், இனி வீட்டை கவனித்துக் கொள்வதோடு கணவர், குழந்தைகள், மாமனார், மாமியாரை கவனித்துக் கொள்வதற்குதான்

இந்தியாவைப் பொருத்தவரை ஒரு பெண் 40 அல்லது 50 வயதை நெருங்கிவிட்டால், இனி வீட்டை கவனித்துக் கொள்வதோடு கணவர், குழந்தைகள், மாமனார், மாமியாரை கவனித்துக் கொள்வதற்குதான் அவள் லாய்க்கு என்று ஒதுக்கப்படுகிறாள். உடல் நலக்குறைவோ அல்லது உடல் எடை கூடிவிட்டாலோ அதுவரை அவள் செய்த தியாகத்திற்காக பாராட்டுவதோடு சரி, இனி குடும்பத்தை கவனிப்பது மட்டுமே அவளது கடமை என நினைக்கிறார்கள்'' என்று கூறும் நீனா குப்தா, இரண்டாண்டுகளுக்கு முன் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு தகவலை வெளியிட்டிருந்தார்.
 ""நான் இப்போது மும்பையில்தான் வசித்து வருகிறேன். மறக்க முடியாத பாத்திரங்களை ஏற்று நடித்ததன், மூலம் பல விருதுகளை பெற்ற எனக்கு மீண்டும் நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது.
 இதுபோன்று பல முன்னாள் நடிகைகளுக்கும் எண்ணம் இருக்கலாம். எனவே, வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் முன்னாள் நடிகைகள் திரையில் தோன்றலாம். அந்த வகையில், வரும் திரையுலகம், மீண்டும் நடிக்க விரும்பும் எனக்கு வாய்ப்பளிக்குமென எதிர்பார்க்கிறேன்'' என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
 அண்மையில் லண்டனில் தனது மகள் மசாபா குப்தா, கடையொன்றை திறந்த நிகழ்ச்சிக்காக சென்றிருந்த நீனா குப்தா, விரக்தி காரணமாக நடிக்க விருப்பமின்றி டெல்லியில் தங்கியிருப்பதாக ரசிகர்கள் கருதுவதை உணர்ந்தே தனக்கு நடிக்க வாய்ப்பளிக்கும்படி கேட்டிருந்தாராம். இவரது வேண்டுகோளை பாலிவுட் ஏற்றுக் கொண்டிருக்கிறது. புதுமுக இயக்குநர் ஹீனா டிசோசாவின் ஆறு பகுதிகள் கொண்ட "ஷூர்வத் காட்விஸ்ட்' என்ற தொடரில் தாய், பாட்டி, மாமியார் என மூன்று வித்தியாசமான பாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது.
 இத்தொடரின் கதை, முந்தைய தலைமுறை பெண்கள் சுதந்திரமாக, நேரம் வரும்போது எப்படி அமைதியாக செயல்படுகிறார்கள் என்பதை அருமையாக விளக்குவதால் உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன். வயதான ஆண்- பெண்களிடையே ஏற்படும் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "பதாய் ஹோவில்' நடித்தது எனக்குப் பிடித்திருந்தது.
 புதிய கருத்துகளுடன் எடுக்கப்படும் இந்தி சினிமாக்களை வரவேற்கும் பக்குவம் ரசிகர்களிடைய தோன்றியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்து கங்கனா ரனாவத்தின் அம்மாவாக "பங்கா' படத்திலும், அக்ஷய் குமார் நடிக்கும் "சூரியவன்ஷி'யிலும் அம்மாவாக நடிக்கிறேன்.
 தொடர்ந்து என் இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுடன் தொடர்பு கொள்வதும், புது பட வாய்ப்புகள் கிடைப்பதும் எனக்கு புத்துணர்வை அளித்துள்ளது'' என்கிறார் நீனா குப்தா.
 - பூர்ணிமா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com