அண்மையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிப் பெற்று, கர்நாடகாவில் முதல் சுயேட்சை வேட்பாளர் என்ற சிறப்பைப் பெற்ற சுமலதா அம்பரீஷ், வெற்றிப் பெற்ற தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்துப் பேசியுள்ளார். இந்நிலையில் மீண்டும் சினிமாவில் நடிப்பீர்களா? என்றதற்கு, "சினிமாதான் என் புகழுக்கு காரணம் என்றாலும் தற்போதைக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை. தொகுதி மக்களுக்கு சேவை செய்வதுதான் முக்கியம்'' என்று கூறியுள்ளார் சுமலதா அம்பரீஷ்.