விடுகதைகள்

வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதைச் சமைத் தான்... பின் வெளியே உள்ளதைச் சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான்... இது என்ன?
விடுகதைகள்

1. பேசாத வரை நான் இருப்பேன். பேசினால் நான் உடைந்து விடுவேன்...
 2. நான் சூரியனைக் கடந்து சென்றால் கூட எனக்கு நிழல் ஏற்படாது...
 3. முழு உலகமும் சுற்றி வரும். ஆனால் ஒரு மூலையிலேயே இருக்கும்...
 4. வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதைச் சமைத் தான்... பின் வெளியே உள்ளதைச் சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான்... இது என்ன?
 5. சுற்றும்போது மட்டும் சுகம் தருவான்...
 6. செய்தி வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே...
 7. ராஜா ராணி உண்டு, நாடு அல்ல... இலைகள் பல உண்டு... தாவரம் அல்ல...
 8. கந்தல் துணிகளைக் கட்டியவன் முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான்...
 9. கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ...
 விடைகள்:
 1. அமைதி, 2. தென்றல் காற்று, 3. தபால் முத்திரை,
 4. சோளக் கதிர், 5. மின்விசிறி, 6. தொலைபேசி,
 7. சீட்டுக்கட்டு, 8. சோளம், 9. உப்பு
 -ரொசிட்டா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com