* கடின உழைப்பு தெய்வ வழிபாட்டுக்குச் சமம்.
- லால் பகதூர் சாஸ்திரி
* எது நல்லது என்பதை அறிந்து தெளிந்தபின் அதைக் கடைப்பிடிக்க வேண்டும்.
- ஜைனர்
* நோய் வரும்வரை உண்பவன் உடல் நலமாகும் வரை உண்ணா நோன்பு மேற்கொள்ள வரும்
- தாமஸ்புல்லர்
* பிறருடைய அன்புக்குப் பாத்திரமாவது நல்லது. அதைவிட நல்லது பிறருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாவது!
- டொனால்டு
* ரகசியத்தைக் காப்பாற்றினால் அது உன் அடிமை....வெளியிட்டால் அதுவே உன் எஜமான்!
- ஹென்றி
* தன்னடக்கமே நல்ல வலிமை.
- ஜேம்ஸ் ஆலன்
* நற்குணம் உள்ள இடத்தில் வணக்கமும், இன் சொல்லும் இருக்கும்.
- கன்ஃபூசியஸ்
* அதிகம் சொல்ல விரும்புபவன் குறைவான வார்த்தைகளையே பயன்படுத்துவான்.
- மகான்
* உலகத்திலிருந்து நீ ஏற்பது குறைவாகவும் உலகத்துக்கு நீ வழங்குவது அதிகமாகவும் இருக்கட்டும்!
- வால்டேர்
* துன்பம் வந்தும் சோர்வு இல்லாதவனை பகைவனும் மதிப்பான்.
- புளூடார்க்
தொகுப்பு : சஜிபிரபு மாறச்சன்