கேள்வி: கடல் கன்னி இருப்பதாகச் சொல்கிறார்களே, இது உண்மையா?
பதில்: கடல் கன்னி என்று யாரைக் குறிப்பிடுகிறார்கள்? பாதி மனித உருவமும் பாதி மீன் உருவமும் கொண்ட ஓர் உயிரினம் இருப்பதாகக் கருதிப் பல ஆண்டுகளாகக் கூறி வருகிறார்கள்..
எல்லா மொழிகளிலும் இந்தக் கடல் கன்னி பற்றிப் பல கதைகள் கால காலமாகக் கூறப்பட்டு வருகிறது.
கற்கால மனிதர்கள்கூட இப்படிப்பட்ட கடல் கன்னிகள் இருப்பதாகக் கருதி பாறைகளில் சித்திரங்களில் வரைந்து வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட பல சித்திரங்கள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவையெல்லாமே கேட்பதற்கும் படிப்பதற்கும் சுவாரசியமாகவும் விந்தையாகவும் இருப்பதுதான் இந்தக் கதைகள் அழியாமல் காக்கப்பட்டு வருவதற்கான காரணம்..
மற்றபடி கடல் கன்னியாவது கடல் கன்னன் ஆவது? எல்லாம் கட்டுக்கதை. கப்ஸா! எக்காலத்திலும் இவர்கள் இருந்ததில்லை என்று கன்னத்தில் அடித்துச் சத்தியம் செய்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.