கேள்வி : பாம்புப் புற்றில் லிட்டர் கணக்கில் பால் ஊற்றுகிறார்களே, அதைப் பாம்பு குடித்து விடுமா?
பதில்: பாம்புப் புற்றில் பால் ஊற்றுவது ஒரு நம்பிக்கை! பொதுவாக ஊர்வனவற்றிற்கு பால் போன்ற திரவப் பொருட்களை உட்கொள்ளும் பழக்கம் கிடையாது! ஆகவே பால் குடிக்காதுதான்! ஆனால் உடம்பில் ஈரப்பதம் குறைந்துவிட்டால் வறட்சி ஏற்பட்டு நீர் குடிப்பதற்கு பாம்பு முயலும். அந்தச் சமயங்களில் மட்டும் நீருக்கு பதில் பாலை வைத்தால் பாம்பு பால் குடிக்கக்கூடும்!