அங்கிள் ஆன்டெனா

பிறந்தவுடன் எல்லாக் குழந்தகளும் அழுவது இல்லை. சில விநாடிகள் சென்ற பிறகுதான் அழத் தொடங்கும்.
அங்கிள் ஆன்டெனா

 கேள்வி: பிறந்தவுடன் குழந்தைகள் அழுவது ஏன்?
 பதில்: பிறந்தவுடன் எல்லாக் குழந்தகளும் அழுவது இல்லை. சில விநாடிகள் சென்ற பிறகுதான் அழத் தொடங்கும்.
 இதற்குக் காரணம், பத்து மாதங்களாக அம்மாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துவிட்டு வெளி உலகுக்கு வருவதுதான். மேலும் சில குழந்தைகள் தாயின் வயிற்றிலிருந்து சிரமப்பட்டு வெளியே வந்திருக்கும். இதுவும் ஒரு காரணம்.
 தாயின் தொடர்பு விட்டுப் போவதால் அழும் குழந்தையைத் தாயின் அரவணைப்பில் வைத்து விட்டால், உடனே அழுகையை நிறுத்தி விடும்.
 அதன்பிறகு ஏறக்குறைய எட்டு மணி நேரத்துக்கு எந்தக் கவலையுமில்லாமல் குழந்தை நிம்மதியாக உறங்க ஆரம்பித்து விடும்.
                                                                   -ரொசிட்டா
 அடுத்த வாரக் கேள்வி
 இப்போது எல்லாத் துறையிலும்
 விஞ்ஞானிகள் வந்து, திறமையாகச்
 செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
 உலகின் முதல் விஞ்ஞானி
 யார் என்று யாரைச் சொல்லலாம்?
 பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம்.
 இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம்
 நல்ல பதில் கிடைக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com