முன்றுறையரையனார்
கயவற்கு அறிவுரை
கூறலாகாது
நடலை இலராகி நன்(று) உணரார் ஆய
முடலை முழுமக்கள் மொய்கொள் அவையுள்
உடலா ஒருவற்கு உறுதி யுரைத்தல்
கடலுளால் மாவடித் தற்று. (பா-72)
மனத்தின்கண் கவலை யிலராய் நன்மை - தீமை அறியாதவராகிய மனவலியுள்ள கயவர்கள் நெருங்கியுள்ள அவையில், அலைத்து வாழ்கின்ற கயவன் ஒருவனுக்கு, உயிர்க்குப் பயன்தரத் தக்கனவற்றைக் கூறுதல், கடலுள்ளே மாங்கனியை வடித்தாற் போலும். (க-து.) கயவற்கு உறுதிப் பொருள்களைக் கூறுதலாகாது.
கடலுளால் மாவடித் தற்று என்பது இச்செய்யுளில் வந்த பழமொழி.