நன்மையும் அடைவார்! 

பகைவர் மூட்டிய தீயால் கொளுத்தப்பட்டு அதனின்றும் உயிர் பிழைத்துச் சென்ற பராந்தக சோழனின் மகனாகிய காரிகாற்சோழனும், இரும்பிடர்த் தலையார் என்னும் பெயரையுடைய தன் மாமனைத் துணையாகப் பெற்று
 நன்மையும் அடைவார்! 

பழமொழி நானூறு
 சுடப்பட் டுயிருய்ந்த சோழன் மகனும்
 பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக் - கடைக்கால்
 செயிரறு செங்கோல் செலீஇயினான் இல்லை
 உயிருடையார் எய்தா வினை. (பா-105)
 பகைவர் மூட்டிய தீயால் கொளுத்தப்பட்டு அதனின்றும் உயிர் பிழைத்துச் சென்ற பராந்தக சோழனின் மகனாகிய காரிகாற்சோழனும், இரும்பிடர்த் தலையார் என்னும் பெயரையுடைய தன் மாமனைத் துணையாகப் பெற்று, பிற்காலத்தில், குற்றமற்ற செங்கோலைச் செலுத்தினான்; (ஆதலால்), உயிருடையார் அடைய முடியாததொரு நல்வினைப் பயன் இல்லை. (க-து.) தீமையே அடைவார், என்றாயினும் நன்மையையும் அடைவர்.
 "உயிருடையார் எய்தா வினை இல்லை' என்பது பழமொழி
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com