குருபூஜைத் திருவிழா
கோயம்புத்தூர், சேக்கிழார் திருக்கூட்டத்தினரால் ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டுவரும் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஸ்ரீ சேரமான் பெருமாள் நாயனார் குருபூஜை தொடர்ந்து 84 -ஆம் ஆண்டு விழாவாக, கேரள மாநிலத்தில் உள்ள திருவஞ்சைக்களம் திருத்தலத்தில் ஜூலை -20 முதல் 22 வரை நடைபெறுகின்றது. இதனை முன்னிட்டு, ஜூலை 20- ஆம் தேதியன்று இரவு 7.00 மணி அளவில் கொடுங்களூர் பகவதி அம்மன் கோயிலில் இருந்து ஸ்ரீ சுந்தரர், சேரமான் பெருமாள் நாயனார் உற்சவ மூர்த்திகள் சிறப்பு அபிஷேக அலங்காரத்திற்குப்பிறகு வெள்ளை யானை, குதிரை ஆகிய வாகனங்களில் ஊர்வலமாக புறப்பட்டு திருவஞ்சைக்களம் சென்றடைகின்றது. ஜூலை 21- அஞ்சைக்களம் இறைவன் இறைவிகள் மூல மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது. ஜூலை 22- குலசேகர ஆழ்வாருக்குத் திருமஞ்சனத் திருக்காப்பும் வழிபாடும் நடைபெறும்.
தொடர்புக்கு: 98434 21050.