நிகழ்வுகள்

தக்கோலத்தில் (அரக்கோணம் அருகில்) உள்ள அருள்மிகு ரத்தினவல்லி சமேத சோமநாதீஸ்வரர் திருக்கோயிலில், அபூர்வ திருக்கோலத்தில் ஸ்ரீ கபாலபைரவர் பிரதிஷ்டையாக உள்ளது.

திருப்பணி

தக்கோலத்தில் (அரக்கோணம் அருகில்) உள்ள அருள்மிகு ரத்தினவல்லி சமேத சோமநாதீஸ்வரர் திருக்கோயிலில், அபூர்வ திருக்கோலத்தில் ஸ்ரீ கபாலபைரவர் பிரதிஷ்டையாக உள்ளது. அம்பிகையைப் போலவே மேற்கரங்களில் பாசம் அங்குசம் ஏந்தி காட்சியளிக்கும் தொன்மையான இந்த பைரவ மூர்த்தி ஆலயத்தில் கண்டு எடுக்கப்பட்டதாகும்.  இத்திருப்பணியில் பக்தர்கள் பங்கேற்கலாம். 
தொடர்புக்கு :  97878 12628 / 99448 58037. 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மோழியனூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அரி ஓம் ஸ்ரீ பெருமாள்,  ஸ்ரீ மாரியம்மன் ஆலய திருப்பணி நடைபெறுகின்றது. பக்தர்கள் இத்திருப்பணியில் பங்கேற்று நலம் பெறலாம்.
தொடர்புக்கு: 75501 68641.

வேலூர் மாவட்டம், சோளிங்கர் அடுத்த பாண்டியநல்லூர் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ ஹரிஹர கற்பக விநாயகர் ஆலயம் மற்றும் அருள்மிகு கனகதுர்க்கை அம்மன் ஆலயங்களின் கோபுர திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் இத்திருப்பணியில் பங்கு கொண்டு இறையருள் பெறலாம்.
தொடர்புக்கு: 90030 99048 / 94441 25383.


நித்தியபடி திருவாராதனை வைப்புநிதி

சுமார் 450 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோதண்டராமர் கோயில் புதுச்சேரி, முத்தியால்பேட்டை எம்.எஸ். அக்ரஹாரத்தில் உள்ளது. ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை கொண்டு சென்றபோது அதிலிருந்து பிசிறு மண் விழுந்த இடத்தில் இந்தக் கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  நபர் ஒன்றுக்கு ரூ. 1000/- வைப்பு நிதியாக வைத்து நித்தியபடி திருவாராதனை (பூஜை) செய்ய முடிவெடுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. 
தொடர்புக்கு: என். திருமலை- 93805 97788.

பால்குட யாத்திரை

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் சித்திரவாடி கிராமத்தில் உள்ளது அருள்மிகு பிரஸன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயம். இங்கு, செப்டம்பர் 22 -ஆம் தேதி, காலை 6.00 மணி அளவில் மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயிலிலிருந்து பால்குட பாத யாத்திரை புறப்பட்டு சித்திரவாடியை வந்தடையும்.
தொடர்புக்கு: 92452 66443 / 91502 44977. 


தங்க கருட வாகன சேவை


விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர் பேட்டை வட்டத்தில் உள்ள பாதூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு அலர்மேல்மங்கா நாயிகா சமேத ஸ்ரீபிரஸன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தில் நடைபெற்றுவரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் முக்கிய நிகழ்வாக, செப்டம்பர் 16- தங்க கருட வாகனம், செப்டம்பர் 18- திருக்கல்யாணம் போன்றவை நடைபெறும்.
தொடர்புக்கு: 97519 84402 / 96773 34550.


பிரம்மோற்சவம்


திருச்சி மாவட்டம், முசிறி வட்டத்தில் உள்ள குணசீலம் அருள்மிகு பிரஸன்ன வேங்கடாசலபதி  பெருமாள் ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. 16.09.2018 - கருடசேவை, 19.09.2018 - திருக்கல்யாண உத்ஸவம், 21.09.2018 - திருத்தேர், தீர்த்தவாரி நடைபெறும்.
தொடர்புக்கு: கே.ஆர். பிச்சுமணி அய்யங்கார்- 89032 75310/  04326 275210.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com